Press "Enter" to skip to content

வெள்ளத்தில் கூடையில் வைத்து மீட்கப்பட்ட ஒரு மாத குழந்தை

வெள்ளத்தில் கூடையில் வைத்து மீட்கப்பட்ட ஒரு மாத குழந்தை

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியை சூப்பர் ராய் புயல் கடுமையாகத் தாக்கியது. அங்கு அடைமழையும் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த பேரிடரின்போது, வெள்ளத்தில் ஒரு மாத குழந்தை ஒன்று ஒரு பெரிய கூடையில் வைக்கப்பட்டு ஓடம் போல தள்ளிக்கொண்டு வந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

மிண்டனாவில் 195 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல், கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த புயலால் சுமார் 1.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. வெள்ளத்தில் சிக்கிய அந்தக் குழந்தை மீட்கப்பட்ட காட்சியை இந்த காணொளியில் பார்க்கலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »