Press "Enter" to skip to content

தெற்கு தொடர்வண்டித் துறை புது வழித் தடங்களுக்கு ரூ.308 கோடி, வடக்கு தொடர்வண்டித் துறைவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி: சு.வெ. புகார்

பட மூலாதாரம், Getty Images

கடந்த நான்கு ஆண்டுகளில் தெற்கு தொடர்வண்டித் துறையில் புதிய வழித்தடத் திட்டங்களுக்கு 308 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால், இதே காலகட்டத்தில் வடக்கு தொடர்வண்டித் துறையில் புதிய வழித் தடத்திட்டங்களுக்கு சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தென்னக தொடர்வண்டித் துறைவைவிட வடக்கு தொடர்வண்டித் துறை மண்டலத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான சு.வெங்கடேசன்.

அந்த அறிக்கையில், `தமிழ்நாடு , கேரளம் உள்ளிட்ட தெற்கு தொடர்வண்டித் துறை பகுதியில் புதிய வழித்தடத் திட்டங்களுக்கு வெறும் 59 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது . ஆனால் வடக்கு தொடர்வண்டித் துறையின் புதிய வழித்தடத் திட்டத்திற்க்கு 14,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஊடகத்தில் வெளிப்படுத்தியிருந்தேன். இதற்கு பதிலளிக்க வேண்டியது தொடர்வண்டித் துறை அமைச்சகம். ஆனால் தெற்கு தொடர்வண்டித் துறை நிர்வாகமோ தமிழகத்துக்கு ஏராளமாக நிதி ஒதுக்கப்பட்டதுபோல செய்தி வெளியிட்டுள்ளது. நான் வெளியிட்ட அறிக்கையில், இரட்டைப் பாதை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்றிருந்தேன்.

மதுரை கன்னியாகுமரி பாதை 21- 22 ல் முடியும் என்ற அறிவிப்பு அமலாகவில்லை என்பதையும், குறைந்தது இன்னும் இரண்டாண்டுகளிலாவது இதை முடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். காட்பாடி- விழுப்புரம்; கரூர் -சேலம்- திண்டுக்கல்; ஈரோடு- கரூர் இரட்டை பாதை திட்டங்களுக்கு பெயரளவுக்கு ஆயிரம் ரூபாயும் ஒரு கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருந்தேன். இதற்கு பதில் அளிக்காமல் சதவீதக் கணக்கிற்குள் புகுந்து உண்மையை மறைக்க முயல்கிறது தெற்கு தொடர்வண்டித் துறை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சு வெங்கடேசன்

பட மூலாதாரம், SU. VENKATESAN FB

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், ` நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளுக்கு தெற்கு தொடர்வண்டித் துறைக்கு ரூ.7,114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . இது கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் என்று கூறியுள்ளார்கள். ஆனால் வடக்கு தொடர்வண்டித் துறைக்கு 66 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை ஏன் மறைக்கிறார்கள்.

101 மடங்கு அதிகம்

முழு உண்மையை சொல்வதாக இருந்தால் கடந்த நான்கு ஆண்டுகள் புதிய வழித்தடத்திட்டத்திற்கான ஒதுக்கீடு என்பது தெற்கு தொடர்வண்டித் துறைக்கு வெறும் 308 கோடி மட்டுமே ( 2019-20ல் 52 கோடி, 2020-21ல் 102 கோடி, 2021-22 ல் 95 கோடி, 2022-23ல் 59 கோடி) ஆனால் வடக்கு தொடர்வண்டித் துறையின் புதிய வழித்தடத்திட்டத்திற்கு ஒதுக்கீடு 31,008 கோடி ( 2019-20ல் 994 கோடி, 2020-21ல் 7,278 கோடி, 2021-22ல் 9,454 கோடி, 2022-23ல் 13,282 கோடி) ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வழித்தடத் திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டுக் கணக்கைப் பார்த்தால் தெற்கு தொடர்வண்டித் துறையைவிட வடக்கு தொடர்வண்டித் துறைக்கு 101 மடங்கு அதிகம் உள்ளது.

இந்த உண்மையை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, தமிழகத்துக்கும் தெற்கு தொடர்வண்டித் துறைக்கும் போதிய நிதி ஒதுக்கவும் புதிய வழித்தடத் திட்டங்களை விரைவுபடுத்தவும் தெற்கு தொடர்வண்டித் துறை நிர்வாகம் ஒன்றிய தொடர்வண்டித் துறை அமைச்சகத்தை வலியுறுத்தி கூடுதல் தொகை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

`நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டினைவிட இந்த ஆண்டு தெற்கு ரயிவேக்கு ஒதுக்கப்பட்ட நிதி சற்று கூடுதலாக இருப்பதற்கு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையையொட்டி நாங்கள் நடத்திய போராட்டம் முதன்மையான காரணம். நாடாளுமன்றத்திலும், நிலைக்குழு கூட்டங்களிலும் தெற்கு தொடர்வண்டித் துறை புறக்கணிக்கப்படுவதை இடைவிடாது சுட்டிக் காட்டியுள்ளோம். தண்டவாளங்கள் மேடுபள்ளம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது ரயிலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிக முக்கியம் நிதி ஒதுக்கீட்டிலும் வடக்குக்கும் தெற்குக்கும் சம பங்கீடு இருக்க வேண்டும் என்பது’ எனவும் சு.வெங்கடேசன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »