ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நரேந்திர மோதி நினைத்தால் புதினுடன் பேசலாம் – யுக்ரேன் தூதர் விடுத்த வேண்டுகோள்
ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேச வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான யுக்ரேனிய தூதர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வியாழக்கிழமை இரவு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இதில் யுக்ரேனியர்களை தாயகத்துக்கு மீட்கும் நடவடிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யுக்ரேன் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள், வன்முறையை கைவிடுங்கள் என்று பேசியிருக்கிறார் நரேந்திர மோதி.
இதற்கு காரணமாக அமைந்த யுக்ரேனிய தூதரின் வேண்டுகோள் பற்றியும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றியும் இந்த காணொளியில் பாருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com