பஞ்சாப் ஜலந்தர் மாவட்ட கிராமத்து இளம் பெண்கள் கால்பந்தாட்டத்தில் அசத்தி வருகின்றனர். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். கால்பந்தாட்ட மைதானத்தில் உள்ள சவால்கள் மட்டுமல்லாமல் சமூகத்தின் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். பெண்கள் வெளியே வரக்கூடாது, ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்துக் கொள்ளக்கூடாது என கூறும் சமூகத்தினருக்கே இடையே தங்கள் திறமையை வெளிக்காட்டி, தங்கள் வறுமையிலிருந்து விடுபடவும் கால்பந்தை நம்பிக்கையுடன் ஆடி வருகின்றனர்.
Source: BBC.com