Press "Enter" to skip to content

மதுரை தொடர் வண்டியில் தீ விபத்து: சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் – தென்னக தொடர்வண்டித் துறை

மதுரை தொடர் வண்டிநிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக வந்திருந்தோர் இருந்த ஒரு தொடர் வண்டிபெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 8 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரண்டு பெண்கள், 4 ஆண்கள் தொடர்வண்டித் துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக தொடர் வண்டியில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தென்னக தொடர்வண்டித் துறை தெரிவித்துள்ளது.

மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளது தொடர்வண்டித் துறைத் துறை.

அதேபாேல, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறிய தொடர் வண்டியில் இருந்த பெண் பயணி ஒருவர், சில பயணிகள் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் போட முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார்.

சிலிண்டர் வெடித்து தொடர் வண்டியில் தீ பற்றியதா?

மதுரை தொடர் வண்டியில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?

உத்தர பிரதேசம் லக்னௌவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி பார்வை செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று யாத்திரைப் பயணிகள் தொடர் வண்டிமூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் பார்வை செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர்.

இவர்களின் தொடர் வண்டிபெட்டி மதுரை தொடர் வண்டிநிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தொடர் வண்டிபெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் தயாரிக்க முற்பட்டபோது அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக ரேணுகா குப்தா என்ற பெண் பயணி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மதுரை தொடர் வண்டியில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?

தனது கணவரை இழந்த ரேணு குப்தா பிபிசியிடம் பேசியபோது, “எங்களுடன் யாத்திரை வந்திருந்த மக்களில் யாரோ சிலர் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

சிலிண்டர் வெடித்து புகை வரத் தொடங்கியதும் அனைவரும் அலறியடித்து வெளியேற முற்பட்டோம். அப்போது சிலர் உள்ளே மாட்டிக் கொண்டார்கள். அதில் என் கணவரும் ஒருவர்,” என்று தெரிவித்தார்.

‘மதுரை மீனாட்சி அம்மனை இன்று பார்க இருந்தோம்’

மதுரை தொடர் வண்டியில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?

மற்றொரு பயணி இந்த விபத்து குறித்துப் பேசியபோது, “கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தென்மாநிலங்களில் இருக்கும் கோவில்களில் சாமி பார்வை செய்வதற்காக லக்னௌவில் இருந்து கிளம்பி வந்தோம். நேற்று நாகர்கோவிலில் இருக்கும் பத்மநாப சாமி கோவிலில் பார்வை செய்துவிட்டு நேற்று இரவு கன்னியாகுமரி தொடர் வண்டிமூலமாக மதுரை வந்தோம்.

இன்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, நாளை ராமேஸ்வரம் செல்வதாக இருந்தோம். அப்படியிருந்த சூழலில் இன்று அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இது எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை,” என வேதனையுடன் தெரிவித்தார்.

“டம் என்று சத்தம் கேட்டு அதிகாலை 5 மணியளவில் எழுந்தோம். ஓடி வந்து பார்த்தபோது தொடர் வண்டிபெட்டி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது,” என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஓ.பாண்டி கூறுகிறார்.

மதுரை தொடர் வண்டியில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?
மதுரை தொடர் வண்டியில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?

இதையடுத்து யாத்திரை பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளனர். அப்படி இறங்கிய பயணிகளில் சிலரைக் காணவில்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ரயிலுக்குள் சிலிண்டர் கொண்டு வரப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரதீப் பிபிசியிடம் பேசியபோது இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவர்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் என்று தெரிய வந்துள்ளது. மற்றுமோர் உடல் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது.

இதுகுறித்து தென்னக தொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், “பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தியதால், மதுரை தொடர் வண்டிநிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த தொடர் வண்டிபெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தொடர் வண்டிபெட்டி தனியார் தரப்பில் முன்பதிவு கணினிமய மூலமாக முன்பதிவு செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக கொண்டு வந்த சமையல் சிலிண்டரே காரணம் – தென்னக தொடர்வண்டித் துறை

மதுரை தொடர் வண்டியில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?

மதுரை தொடர் வண்டிநிலையத்திற்கு அருகே இந்த தொடர் வண்டிபெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5:15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 5:45 மணிக்கு தீயணைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. அதையடுத்து 7 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

வேறு தொடர் வண்டிபெட்டிகளுக்கும் சேதம் ஏற்படவில்லை.

விபத்துக்குள்ளான இந்த ரயில், லக்னௌவில் இருந்து 65 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 3:47 மணிக்கு மதுரையை வந்தடைந்தது. பின், யாத்திரைக்காக தனியார் சார்பில் பதிவி செய்யப்பட்டிருந்த தொடர் வண்டிபெட்டி பிரிக்கப்பட்டு தொடர் வண்டிநிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் தொடர் வண்டிபெட்டியில் இருந்த சிலர், சட்டவிரோதமாக கொண்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டரை சிற்றுண்டி தயார் செய்யப் பயன்படுத்தியதால், பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது,” என்று தெரிவித்துள்ளது.

ரயிலில் என்ன பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது ?

எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள்

பட மூலாதாரம், INDIAN RAILWAYS

ரயிலில் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கல்லெண்ணெய், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, எரிவாயு உருளை, கன் பொடி போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துக்கொண்டு தொடர் வண்டியில் பயணம் செய்யக்கூடாது.

ரயிலுக்குள் அடுப்பு, கேஸ், ஓவன் போன்றவற்றை பற்றவைக்கக் கூடாது. அதே நேரத்தில், தொடர் வண்டிபெட்டியிலோ அல்லது தொடர் வண்டிநிலையத்திலோ சிகரெட்டைப் பற்ற வைக்கக்கூடாது.

ரயிலில் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது தொடர்வண்டித் துறை சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறினால், ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »