Press "Enter" to skip to content

தனித்தீவான ஸ்ரீவைகுண்டம் – தொடர் வண்டியில் சிக்கிய 800 பயணிகள் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி?

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் பெய்த அடைமழை (கனமழை) அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்திருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் சிகப்பு ஆபத்து எச்சரிக்கை வழங்கியுள்ளது. மேலும் 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களுக்கான சிகப்பு ஆபத்து எச்சரிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்றும் (19/12/2023) பொது விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த பகுதிகளில் ஓராண்டில் பெய்யும் மழையை விட அதிக மழை 24 மணி நேரத்தில் பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் (17/12/2023) இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூர் தொடர் வண்டிநிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிபுறப்பட்டது. அந்த தொடர் வண்டியில் சுமார் 800 பயணிகள் பயணித்தனர்.

தமிழ்நாடு, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம்

ஸ்ரீவைகுண்டம் தாதன்குளம் அருகே அடைமழை (கனமழை)யால் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்டவாளத்தின் அடிப்பகுதியில் இருந்த சரளைக் கற்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் தொடர்வண்டித் துறை தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிய படி நின்றது.

இந்த தகவல் உடனடியாக தொடர் வண்டிஎன்ஜின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டு, ரயிலானது ஸ்ரீவைகுண்டம் தொடர் வண்டிநிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இரவு நேரம் என்பதாலும், அடைமழை (கனமழை) வேறு பெய்து கொண்டிருந்ததால் தொடர் வண்டியில் இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்து போனார்கள். அடைமழை (கனமழை) தொடர்ந்ததால் ஸ்ரீவைகுண்டம் தனித்தீவாக மாறியது. இதனால் தொடர் வண்டியில் சிக்கிய பயணிகளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டது.

மாட்டில் பால் கறந்து குழந்தைகளின் பசியாற்றிய கிராம மக்கள்

தமிழ்நாடு, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம்

ஸ்ரீவைகுண்டம் தொடர் வண்டிநிலையத்தில் தொடர் வண்டியில் மாட்டி கொண்ட சுரேஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் எனது குடும்பத்துடன் திருச்செந்தூரில் சுவாமி பார்வை செய்வதற்காக எனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் வந்து சுவாமி பார்வை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்செந்தூர் தொடர் வண்டிநிலையத்தில் இருந்து தொடர் வண்டியில் புறப்பட்டோம்.

திருச்செந்தூர் தொடர் வண்டிநிலையத்திலிருந்து தொடர் வண்டி ஏறும் போது கன மழை பெய்தது. தொடர் வண்டி புறப்பட்டு சுமார் 9:15 மணி அளவில் தொடர் வண்டிஸ்ரீவைகுண்டம் தொடர் வண்டிநிலையம் வந்தடைந்தது. ஸ்ரீவைகுண்டம் தொடர் வண்டிநிலையத்தில் தொடர் வண்டிவெகு நேரம் நின்றது.

ரயிலில் இருந்த பயணிகள் வேறு தொடர் வண்டிகடந்து செல்வதற்காக காத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தொடர்வண்டித் துறை ஊழியர்கள் சிலர் கன மழை பெய்வதால் தொடர்வண்டித் துறை தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக்கற்கள் அடித்துச் சென்றதால் தொடர்ந்து தொடர் வண்டிசெல்லாது என தெரிவித்தனர்.

மேலும் கன மழை பெய்து வருவதால் வெள்ள நீர் தொடர் வண்டிநிலையத்தை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் ரயிலை விட்டு வெளியே வர வேண்டாம் இந்த பிரச்சனை ஒரு சில மணி நேரத்தில் சரி செய்யப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து தொடர் வண்டிஸ்ரீவைகுண்டம் தொடர் வண்டிநிலையத்தில் நின்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடர் வண்டிஇருந்த முதியவர்கள், குழந்தைகள் மற்றும் தொடர் வண்டிபயணிகள் தங்கள் கொண்டுவந்த உணவு மற்றும் மருந்து எடுத்துக் கொண்டனர்.

அடுத்த நாள் திங்கள் கிழமை காலை எங்களுக்கு உணவு கிடைக்காததால் அருகில் இருந்த ஒரு கடைக்குச் சென்று பயணிகள் தங்களுக்கு தேவையான பிஸ்கட், பண் மட்டும் வாங்கி கொண்டனர்.

தமிழ்நாடு, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம்

அதன் பின்னர் உணவில்லாது மிகுந்த கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் கிராம மக்கள் தொடர் வண்டிபயணிகளின் உணவுக்காக பேருதவி செய்தனர்.

கிராம மக்கள் தொடர் வண்டிநிலையத்தின் அருகில் இருந்த பத்ரகாளியம்மன் கோவிலில் திங்கட்கிழமை காலையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை மூன்று வேளையும் உணவு சமைத்து எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவருக்கும் பசியாறினர்.

மேலும் தொடர் வண்டியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கிராம மக்கள் மாட்டில் பால் கறந்து அதை காய்ச்சி தொடர் வண்டியில் இருந்த ஒவ்வொரு பெட்டியாக சென்று பால் தேவைப்படுபவர்கள் வாங்கி கொள்ளுமாறு குழந்தை வைத்திருந்த ஒவ்வொருவரிடமும் கேட்டுகேட்டு கொடுத்தனர். தொடர் வண்டிபயணிகள் அனைவரும் அந்த கிராம மக்களுக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

உலங்கூர்தி மூலம் வழங்கப்பட்ட உணவு

தமிழ்நாடு, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம்

தொடர்ந்து பேசிய சுரேஷ், “இன்று காலை உலங்கூர்திகளில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. ஆனால் யாரையும் மீட்கும் பணியில் உலங்கூர்தியில் வந்தவர்கள் ஈடுபடவில்லை. பின்னர் மாலை நேரத்தில் தொடர்வண்டித் துறை மீட்பு படையினர் தொடர் வண்டிநிலையத்திற்கு வந்து ஸ்ரீவைகுண்டம் தொடர் வண்டிநிலையத்திலிருந்து கயிறு கட்டி ஒவ்வொரு நபராக அருகில் உள்ள வெள்ளூர் என்ற கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.

ஆங்கிருந்த முதல் கட்டமாக ஆறு பேருந்துகளில் பேருந்து ஒன்றுக்கு சுமார் நபர்களை அழைத்து கொண்டு வாஞ்சி மணியாச்சி தொடர் வண்டிநிலையத்துக்கு அழைத்து செல்கின்றனர். இன்னும் தொடர் வண்டிநிலையத்தில் 400க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்” என்றார்.

என்னுடைய வயதுக்கு இவ்வாறான இயற்கை பேரிடரை சந்தித்ததில்லை நானும் என் குடும்பமும் கடந்த இரண்டு நாட்கள் மிகுந்த அவதி அடைந்தோம். எங்களுக்கு உதவிய கிராம மக்கள் வசிக்கும் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு குழுவினர் யாரும் இதுவரை அந்த கிராமத்திற்கு வரவில்லை. தயவு செய்து அரசு மீட்பு குழுக்கள் அந்த கிராமத்திற்கு அனுப்பி பாதிக்கப்பட்ட கிராம மக்களை காப்பாற்றுமாறு சுரேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

இறுக்கமான மனநிலையில் பெண்கள்

தமிழ்நாடு, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம்

ரயிலில் மாட்டிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி பிபிசி தமிழிடம் பேசுகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்செந்தூரில் இருந்து அடைமழை (கனமழை)யுடன் தொடர் வண்டியில் புறப்பட்டோம்.

தண்டவாளங்கள் ஏற்பட்ட பழுது காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொடர் வண்டிநிலையத்தில் இருந்து தொடர் வண்டிபுறப்படவில்லை. தொடர்ந்து அடைமழை (கனமழை) பெய்ததால் இரவு முழுவதும் தொடர் வண்டிவிட்டு வெளியே வராமல் தொடர் வண்டிகுள்ளேயே படுத்து உறங்கினோம்.

திங்கட்கிழமை காலை சற்று மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து குழந்தைகள் பெரியவர்கள் பசியால் மிகவும் அவதிப்பட்டனர். ஆனால் அருகில் இருந்த கடைகளில் தின்பண்டங்களை மட்டுமே வாங்க முடிந்தது.

நாங்கள் தொடர் வண்டிநிலையத்தில் உணவின்றி சிக்கி தவிப்பதை அறிந்த ஸ்ரீவைகுண்டம் கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உணவளித்து எங்களை காப்பாற்றினார்.

ரயிலில் மாட்டி கொண்டவர்கள் பலர் தினசரி மருந்து எடுத்துக் கொள்ளும் முதியவர்கள். அவர்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை வைத்திருந்ததால் உடல் ஆரோக்கியம் மோசமடையாமல் பார்த்து கொண்டனர்.

ரயிலில் இருந்த பெண்களை பொறுத்த அளவு மிகுந்த இறுக்கமான மனநிலை இருந்ததை காண முடிந்தது. ரயிலை விட்டு வெளியே வந்தால் மழை, எனவே ரயிலுக்குள்ளே முடங்கி இருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூரில் சாமி பார்வை செய்துவிட்டு திங்கட்கிழமை காலை சொந்த ஊருக்கு திரும்பி எனது மகள் தேர்வு எழுத இருந்தால் ஆனால் இன்று தான் நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம். இதனால் எனது மகள் தேர்வு எழுத முடியவில்லை மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.

அடைமழை (கனமழை)யும் முன்னெச்சரிக்கையாக ரயிலை ரத்து செய்திருந்தால் இந்த நிகழ்வை தவிர்த்து இருக்கலாம் என நான் நினைக்கிறேன். தொடர் வண்டிபயணிகள் அனைவரும் இறுக்கமான மனநிலையில் தான் இதுவரை இருக்கிறோம்.

இன்று காலை உலங்கூர்தியில் இருந்து உணவு பொட்டலங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. யாரையும் மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடவில்லை. அதன் பின்னர் தொடர்வண்டித் துறை மீட்பு படையினர் வந்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்” என மகேஸ்வரி தெரிவித்தார்.

தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து

தமிழ்நாடு, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம்

“மதிய வேளையில் மழை குறைந்து, வெள்ளம் சற்று வடியத் தொடங்கியதும் வயதானவர்கள் சிலர் தவிர்த்து, மற்ற அனைவரும் வெள்ள நீரில் நடந்தே தொடர் வண்டிநிலையத்தை விட்டு வெளியே சென்றோம். எங்களுடன் என்.டி.ஆர்.எஃப் குழுவும் இருந்தது. சிலரை படகுகள் மூலமும் மீட்டனர்” என்று கூறினார் செந்தூர் இரயிலின் ஓட்டுநர் ஷாஜு.

“நாங்கள் வெளியே சற்று தூரம் வந்தவுடன், அங்கு ஆறு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன் மூலமாக நாங்கள் மணியாச்சி இ தொடர் வண்டிநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம். இங்கு எங்களுக்கு அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேறொரு தொடர் வண்டிமூலமாக பயணிகள் அனைவரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

“இ தொடர் வண்டிஸ்ரீவைகுண்டம் நிலையத்திற்கு வந்தவுடன், மேற்கொண்டு இரயிலை இயக்க வேண்டாம். அனைத்து இடங்களிலும் வெள்ளம் பாய்கின்றது என இதொடர்வண்டித் துறை துறை எனக்கு எச்சரிக்கை அளித்தது. அதனால் நான் ரயிலை அங்கேயே நிறுத்தி விட்டேன். இதனால் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது” எனக் கூறுகிறார் ஷாஜு.

இரண்டு நாட்களாக இ தொடர் வண்டிநிலையத்தில் கழித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், இதொடர்வண்டித் துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது, சுற்றியிருந்த அனைத்து கிராம மக்கள் மிகவும் உதவியாக இருந்தனர். இது போன்ற பேரிடர் காலங்களில் பிறரைக் குறை கூறாமல் கிடைத்த உதவிகளுக்கும் வாய்ப்புகளும் நன்றி கூற வேண்டும்” என்கிறார் ஷாஜு.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »