கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவல்னி, ஆர்க்டிக் வட்டத்திலுள்ள சிறையில் இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதிபர் விளாதிமிர் புதினின் மிகக் கடுமையான விமர்சகராகப் பார்க்கப்பட்டவர் நவல்னி. நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்மீது போடப்பட்ட வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகப் பரவலாகக் கருதப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் கடுமையான சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆர்க்டிக் தண்டனை காலனி சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
யமலோ-நெனெட்ஸ் மாவட்டத்தில் உள்ள சிறைத்துறை, அவரது மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய முயன்று வருகிறது எனக் கூறியுள்ளதாக, டாஸ்(Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source: BBC.com