மதுரை அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரை மாநகர் பழங்காநத்தம், தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி (71). இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு மதுரை மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.புளோரா குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கருணாநிதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai