Press "Enter" to skip to content

Posts published in “தமிழகம்”

தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு ? – பெற்றோர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அருகே தடுப்பூசி போடப்பட்ட கைக்குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை கிராமத்தைச்சேர்ந்த லாரி டிரைவர் சீரஞ்சிவி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு லித்தேஷ் என்ற 5…

‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்தது. அதன்பின் வேகமெடுத்த இந்த வைரஸ் தற்போதுவரை 1,355 பேரின் உயிரைப் பறித்துள்ளது. இதுவரை 60,015 பேருக்கு கொரோனா வைரஸ்…

ஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை மட்டுமே – ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அரசு விளக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் வெறும் பரிந்துரை மட்டுமே என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி…

காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் – சாதுர்யமாக பிடித்த காவல் துறை

நெல்லையில் சாலைகளில் திரியும் ஆடுகளை கார்களில் வந்து கடத்திச் சென்ற நூதன கொள்ளை கும்பலை, காவல்துறை காத்திருந்து கைது செய்துள்ளது. நெல்லை மாநகரப் பகுதியான அருகன்குளம் சேந்திமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த…

கேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு

கேரள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாடு அருகே கம்பமலை என்ற கிராமத்தில் 7 பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழு நுழைந்ததாக, அம்மாநில நக்சல்…

மன நலம் குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு !

  வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க, அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு…

‘சொத்து வரியை உயர்த்தாமல் மேயர் பதவியை பிடிக்க மட்டும் ஆர்வமா ?’ – அரசியல்வாதிகளை சாடிய உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர், மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை வசூல் செய்ய விதிகளை…

தக்கலையா? தக்காளியா? – இணையத்தில் பரவும் அரசு பேருந்து பயணச்சீட்டு

கன்னியாகுமரி அருகே அரசு பேருந்தில் வழங்கப்பட்ட மின்னணு பயணசீட்டில் ஊர் பெயர் “தக்கலை” என்பதற்கு பதிலாக “தக்காளி” என குறிப்பிடபட்டிருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மதுரை மாவட்டம் அரசுப் போக்குவரத்து பணிமனை போடி கிளையில் இருந்து…

”போலி செய்திகளை தடுக்க சிறப்பு டீம்” – களத்தில் இறங்கிய சென்னை காவல்துறை

சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை உருவாக்க சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எவ்வளவோ போலி செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. பழைய புகைப்படங்கள், என்றோ நடந்த…

“நானும் கீழ் மகன் (ரவுடி)தான்” – கத்தியை காட்டி மாமூல் கேட்ட கீழ் மகன் (ரவுடி)க்கு நேர்ந்த சோகம்

வானூர் அருகே காய்கறி வியாபாரியிடம் மாமூல் கேட்ட ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ராஜ்குமார். இவரின் கூட்டாளியான, நாவற்குளத்தை சேர்ந்த உயதயராஜ்(26) மீது புதுச்சேரி மற்றும்…

காதலிக்க மறுத்ததால் பெண் கொலை – இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகர் நல்லிக் கவுண்டர் வீதியை…

ஆட்டோவில் விட்டுச்சென்ற நகை, பணம்.. நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர் – குவியும் பாராட்டு

மதுரையில் ஆட்டோவில் தவறவிட்ட நகை மற்றும் பணத்தை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் கடந்த 10ம் தேதி காளவாசல்…

‘கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்.. காவல்துறையில் தஞ்சம்’ வாழ்க்கையை தேடும் காதல் ஜோடி

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டி மாலையும், கழுத்துமாக காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(25). சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் வினிதா(24). இருவரும் திருச்செங்கோட்டில்…

‘வன்முறையைத் தூண்டும் பேச்சு’ – 2 ஆண்டுகளுக்குப் பின் சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   காமராஜர் நினைவு நாளையொட்டி 2018ஆம் ஆண்டு கிண்டி காமராஜர் நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை…

செவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: இருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு

நெல்லையில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு,…

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் ? – வெளியான தகவல்

அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிய சத்துணவு திட்டத்தை…

கும்பகோணத்தில் இருக்கும் கோயிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் திருட்டு

கும்பகோணம் அருகே உள்ள கோவிலில் இருந்து ஐம்பொன்னில் செய்யப்பட்ட சீனிவாச பெருமாள் சிலை திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கும்பகோணம் அருகே திருபுறம்பியம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் ஒன்று உள்ளது. சுமார் 200…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ‘உதயசூரியன் வடிவமா?’ – பாஜகவினர் எதிர்ப்பால் தோண்டப்பட்ட புதுச் சாலை

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை, உதயசூரியன் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்தச் சாலையை தோண்டிப் போட்டுள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஸ்மார்ட்…

‘பிகில்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை !

பிகில் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விசாரணைக்காக வருமானவரி புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வருமான வரித்துறையினர் சரமாரியான கேள்விகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக அதனை தயாரித்த ஏ.ஜி.எஸ்.…

பண இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி – அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!

புதுச்சேரியில் பிரபல வங்கியின் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரு கும்பல், புதுச்சேரியில் உள்ள ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில்…

உயிர் பிரியும் போதும் மாணவிகளை பத்திரப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்

தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளை தான் இறக்கும் நிலையிலும் பத்திரமாக அனுப்பி வைத்த ஆட்டோ ஓட்டுநரை நினைத்து மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம். இவர் காலையும், மாலையும் பள்ளி…

பிரான்சிலிருந்து திரும்பிய மகனை சொத்து தகராறில் அடித்துக் கொன்ற தந்தை

விடுமுறைக்காக பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வந்த மகனை சொத்து தகராறில் தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் இறால் ஏற்றுமதி தொழில் செய்து…

சாலையோரம் நின்ற சிறுவர்கள் : தேரை நிறுத்தி இனிப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறுவர்களுக்காக காரை நிறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் முதலமைச்சர் பழனிசாமி தனது காரில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது சாலையோரம் நிற்கும் சிறுவர்-சிறுமிகள் அவரை பார்த்து கை…

நம்பர் பிளேட்டுகளை இரவிலும் படமெடுக்கும் துல்லிய ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) – அதிரடி காட்டும் சென்னை காவல்துறை!

சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் அதிநவீன கேமராக்கள் சென்னையில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மூன்றாம் கண் என்ற திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு வருகின்றன.…

#TopNews: டெல்லி தேர்தல் முடிவுகள் முதல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் வரை..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கெஜ்ரிவால் நம்பிக்கை. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தரைமட்டமாகிவிடும் என பாரதிய ஜனதா கருத்து. அமெரிக்க…

குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் – விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்

தாயே குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தது போலீசார் விசாரணையில் திடீர் திருப்பமாக தெரியவந்துள்ளது. அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் அரசுப் பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் மற்றும் சுஷ்மிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு…

மகனை இழந்த சோகத்திலும் மனிதநேயம் காட்டிய பெற்றோர் – விமானத்தில் சென்னை வந்த இருதயம்..!

சேலம் அருகே மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இருதயம் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் விஜயகுமார் – ராணி தம்பதியின் மகன் சுரேந்திரன். இவர் கடந்த 8ஆம் தேதி சேலம் மாவட்டம்…

பணியாளர் காலில் விழுந்து ஆசி வாங்கிய தேசிய ஆணையத்தின் உறுப்பினர்…!

தேசியத் துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஹீர்மானி. இவர் துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பங்களாதேஷ் வீரர்கள் மீது நடவடிக்கை வேண்டும்’ : ‘யு19’ இந்திய…

எழுத்து தேர்வில் முறைகேடு : கையெழுத்து மூலம் சிக்கிய சிஎஸ்எப் காவலர் பணி நீக்கம்

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோவில் பணிபுரிந்து வந்த சிஎஸ்எப் காவலர் எழுத்து தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக பணிநீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்…

இனி பட்டா மாறுதலுக்கு தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியதில்லை…!

பத்திரப் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில்…

வரலாறு படைத்த வங்கதேசம் முதல் சீன அதிருபருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் வரை..! #TopNews

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. அரசியல் கட்சிகள் வரவேற்பு. விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி. 23 அரசு வேலைகளை 4…

‘ஆணாக வாழ விடுங்கள்’ : அடம்பிடிக்கும் திருமணமான இளம் பெண்.. விரக்தியில் தாக்கிய தந்தை

திருநம்பியாக உள்ள தன்னை தனது தந்தை கொலை செய்ய முயற்சிப்பதாக இளம் பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளார். தந்தை தாக்கியதால் காயமடைந்த அவர் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி தருவைகுளம் தெற்கு…

‘டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கப்படும்’ : முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி தராது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் !  சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு…

மதுபோதையில் 8 மாத பெண் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்ற தந்தை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுபோதையில் இருந்த தந்தை தனது ‌8 மாத பெண் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி – லால்குடியைச் சேர்ந்த ராஜதுரை, தனது மனைவிகள் சித்ரா,…

விஷவாயு தாக்கியவரை வாயோடு வாய் வைத்து காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்

திருவேற்காடு அருகே கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கியவரை மீட்ட தீயணைப்பு துறையினர் அவரை உயிர் பிழைக்க வைக்க போராடும் காட்சி பார்ப்போரை நெகிழ வைக்கிறது. திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பள்ளி…

தமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் திட்டம்?

நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவித்த நடிகர்‌ ரஜினிகாந்த்,…

விடுமுறைநாளில் களைகட்டிய மதுபான விற்பனை: காத்திருந்து வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்

மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும், கொரட்டூரில் காவல்நிலையம் அருகே மதுபான கடையில் விற்பனை களைகட்டியது. நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுவை வாங்கிச் சென்றனர். வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மது…

உச்சக் கட்ட போதை… உணர்வில்லாத நிலை : பேருந்து நிலைய சாக்கடைக்குள் ‘குடி’மகன் !

குமுளி பேருந்து நிலையம் அருகே துர்நாற்றம் வீசும் சாக்கடைக்குள் விழுந்து கிடந்த குடிமகனின் கோலம் காண்போரை முகம் சுழிக்க வைப்பதாய் இருந்தது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி பேருந்து நிலையம் தற்போது குமுளி…

டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு முதல் ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை… #TodayTopNews

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 61.46% வாக்குகள் பதிவு. வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய…

வறட்சியை நோக்கி வேகமாகச் செல்லும் முதுமலை புலிகள் காப்பகம்

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் வெப்பம் காரணமாக வனப்பகுதி வறட்சியை நோக்கி வேகமாகச் செல்கிறது.…

‘திமுக போட்ட பொய் வழக்குகளால் ஜெயலலிதா இறந்தார்’ – ஆர்.பி.உதயகுமார்

திமுக போட்ட பொய் வழக்குகளால்தான் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்தார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்ததினம் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்து…

கடத்தல் மணல் தடுத்து நிறுத்தம்: டிராக்டரை ஏற்றி போலீசாரை கொலை செய்ய முயற்சி

கரூர் குளித்தலை அருகே கடத்தல் மணலை தடுத்து நிறுத்திய போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை முயற்சி செய்ததாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாலவிடுதி காவல்…

கொடைக்கானலில் பார்ட்டி- போதையில் ஆட்டம், பாட்டம்; 200 பேரை மடக்கி பிடித்த காவல் துறையினர்..!

கொடைக்கானலில் போதைப்பொருட்களை பயன்படுத்தி கேளிக்கையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாவுக்கான இடங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் என…

நள்ளிரவில் கடலில் மோதிரத்தை மாற்ற ஆசைப்பட்ட தம்பதி – சோகத்தில் முடிந்த திருமண நாள் கொண்டாட்டம்

திருமண நாளை தம்பதியினர் கொண்டாட சென்ற நிலையில், கடல் அலையில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூரைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்-வினி சைலா(27) தம்பதி. இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

வாக்கி டாக்கி முறைகேடு – காவல்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு

தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல்துறையினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து, 11 வினாக்களை…

பிப். 14ம் தேதி தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல்

வரும் 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை சமீபத்தில்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து, தமிழக அரசின் நிதிநிலை…

இது நாடு கடந்த காதல்.. 3 முறைப்படி திருமணம்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த வாலிபருக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இந்துமுறை, கிறிஸ்தவ முறை, மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் நடந்தது. படிக்கச் சென்ற இடத்தில் மலர்ந்த காதல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமாக…

7 பேரை விடுவிக்க ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்: மத்திய அரசு தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை…

சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

காலணியை கழற்ற சொன்ன விவகாரத்தில், சிறுவனிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 27 யானைகளுக்கான புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.…

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் விலை உயர்வு அமல்

தமிழக டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் அரசிற்கு…