பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாகிதாரிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
பங்குச்சந்தை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலில் கையெறி குண்டை வீசிவிட்டு, கட்டடத்துக்குள் அவர்கள் நுழைந்துள்ளார்.
மூன்று துப்பாகிதாரிகள் கொல்லப்பட்டதாகவும், தங்களின் பதில் தாக்குதல் நடந்துவருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது
ஆனால், மொத்தம் எத்தனை துப்பாக்கிதாரிகள் கட்டடத்துக்குள் நுழைந்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com