கிம் ஜாங்-உன் எச்சரிக்கை: வட கொரியாவை நெருங்கும் இரண்டு ஆபத்துகள்
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் “பாவி” சூறாவளி ஆகியவற்றால் ஏற்படக்கூடும் அபாயங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் தனது கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதுவரை வடகொரியாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அது அங்கு பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.
Source: BBC.com