ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடலுக்கடியில் கொழுந்து விட்டெரியும் எரிமலை – என்ன நடக்கிறது அங்கே?
ஒரு பெரிய எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமியைத் ஏற்பட்டதைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூசிலாந்து விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த எரிமலை உமிழ்வு காரணமாக பசிபிக் தீவுகள் சாம்பலால் மூடப்பட்டுள்ளன. டோங்காவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளும் செயல்படவில்லை.
பெரு, சிலி, ஃபிஜி ஆகிய நாடுகளில் ஆக்ரோஷமான சுனாமி அலைகள் தாக்கின. கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தன.
டோங்காவில் 80,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) பிபிசியிடம் தெரிவித்தது.
சுனாமி “கணிசமான சேதத்தை” ஏற்படுத்தியதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியிருக்கிறார்.
இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com