Press "Enter" to skip to content

Posts tagged as “தமிழகம்”

தலா 5,000 முதல் 25,000 ஒதுக்கீடு அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றம்: மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

வேலூர்: அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க தலா 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில…

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் மீட்க கோரி, ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 27ம் தேதி மீன் பிடிக்க சென்ற 11 மீனவர்களை, இலங்கை…

பேரணாம்பட்டு அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுத்தை குட்டி மீட்பு

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் உள்ள 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பு காட்டில் விட்டனர். வேலூர் மாவட்டம், ேபரணாம்பட்டு…

ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு: கட்சி போராட்டத்துக்காக மாணவர்கள் கடத்தல்? நாம் தமிழர் நிர்வாகியை பிடித்து காவல் துறையினர் விசாரணை

ஆரல்வாய்மொழி:  குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி பகுதியை சேர்ந்த 9, 6, 5, 4, 2ம் வகுப்புகளில் படிக்கும் 7 மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு நேற்று காலை நடந்து சென்று…

மயிலாடுதுறையை அலற விடும் மர்ம நபரின் பேஸ்புக் கால்: ‘‘அண்ணன் வெளியில போயிட்டார், தனியாத்தானே இருக்கீங்க, துணையா வரட்டுமா..’’தனியாக இருக்கும் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை

மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான மயிலாடுதுறையை அடுத்துள்ள கஞ்சாநகரம்  கிராமம் மற்றும் அருகில் உள்ள சில கிராமங்களில் கடந்த வீட்டில் தனியாக இருக்கும் குடும்ப பெண்களிடமும், கல்லூரி மாணவிகளிடமும் 3 மாதங்களாக…

ராஜபாளையம் அருகே வைக்கோல் தீயில் எரிந்து நாசம்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பொன்னையா முதலியார் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. சில தினங்களுக்கு முன்பு இவரது வயலில் ெநல் அறுவடை நடந்தது. அறுவடைக்கு பின்னர், சேத்தூர் காவல்…

போதிய பேருந்துகள் வராமல் டிமிக்கி: நெல்லையில் `காத்து’ வாங்குது ஆம்னி பஸ் நிலையம்…கூடுதல் வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படுமா?

நெல்லை: மாநகரில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்ட நெல்லை மாநகராட்சி பஸ் நிலையத்திற்குள் குறைந்த அளவிலான பஸ்களே வருகின்றன. எனவே இங்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல…

பிராய்லர் கோழி முட்டைக்கு சாயம் பூசி நாட்டுக் கோழி முட்டை என விற்பனை: 3,900 முட்டைகள் அழிப்பு

கோவை: பிராய்லர் கோழி முட்டைக்கு சாயம்பூசி நாட்டுக்கோழி முட்டை என்று விற்கப்பட்ட மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.கோவை மாநகர பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் பிராய்லர் கோழி முட்டைகளை சாயம் பூசி நாட்டுக்கோழி…

கே.வி.குப்பம் பகுதியில் அதிர்ச்சி: காவல் துறைகாரரின் ஆட்டை திருடிய கும்பல்

வேலூர்: கே.வி.குப்பம் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளின் அருகே கட்டிவைக்கும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்ம கும்பல் திருடி வந்த நிலையில், போலீஸ்காரரின் ஆட்டையும் திருடிச் சென்றுள்ளனர்.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில், ஆலங்கனேரி, வடுகன்தாங்கல்,…

பர்கூர் வனப்பகுதியில் காட்டுபன்றி வேட்டை 2 பேர் அதிரடி கைது

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை கொங்காடை பகுதியை சேர்ந்தவர்கள் மாதேவன்(50), மாதன் (40). சகோதரர்களான இவர்கள் கோயில்நத்தம் பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். தோட்டத்தில் விளைவிக்கப்பட்டுள்ள பயிர்களை காட்டுபன்றிகள் அழித்துவிடும்…

திருச்சி மணச்சநல்லூர் நாளந்தர வேளாண் கல்லூரியில் 8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த உத்தரவுக்கு தடை

திருச்சி: திருச்சி மணச்சநல்லூர் நாளந்தர வேளாண் கல்லூரியில் 8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. விதிகளை மீறி சேர்க்கப்பட்ட 8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால…

வேடசந்தூரில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சாலை மறியல்

திண்டுக்கல்: வேடசந்தூரில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சாலை மறியலில் ஈடுபட்டார். உண்மை குற்றவாளியான உமாசங்கரை காப்பாற்ற போலீஸ் முயற்சிப்பதாக கூறி திண்டுக்கல்-பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டார். Source:…

பழநி தைப்பூச திருவிழாவுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

மதுரை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பழநிக்கு கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலின் முக்கிய திருவிழாக்களில்…

மதுரையில் குடிபோதையில்எந்திர இருசக்கரக்கலன் (பைக்) ஓட்டியவரிடம் அபராதம் வசூலித்த காவலர்: அதிகமான பணம் வசூல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு காணொளி வெளியீடு

மதுரை:  மதுரையில் குடிபோதையில் பைக் ஒட்டியவரிடம் அபராத தொகையை விட கூடுதலாக 500 ரூபாய் பணம் வசூலித்ததாக போக்குவரத்து தலைமைக்காவலர் மீது புகார் எழுந்துள்ளது. மதுரை மாரியம்மன் தெப்பக்குள பகுதியில் போக்குவரத்து தலைமைக்காவலர் அரிச்சந்திரன்…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே விபத்தில் உயிரிழந்தவர் சடலத்துடன் மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே விபத்தில் உயிரிழந்தவர் சடலத்துடன் ஒருமணி நேரமாக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லார்ரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள், மக்கள்…

டெல்லி ஜாமியா பல்கலை. துப்பாக்கிச்சூட்டை கண்டித்து கள்ளக்குறிச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து கள்ளக்குறிச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து ஜாமியா பல்கலை. ஷாஹின் பாக்கில் நடந்த போராட்டங்களில் துப்பாக்கிச்சுடுகள்…

திண்டுக்கல் அருகே காட்டு மாடு முட்டியதில் பெண் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காட்டு மாடு முட்டியதில் பெண் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பேத்தரைப்பட்டியில் காட்டு மாடு முட்டியதில் அங்கம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். Source: Dinakaran

உத்தமபாளையத்தை மையமாக கொண்டு இலவச அமரர் ஊர்தி சேவை தொடங்கப்படுமா?

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தை மையமாக வைத்து இலவச அமரர் ஊர்தி வாகன சேவை உடனடியாக தொடங்க தேனி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் பெரிய தாலுகாவாக…

மருத்துவக்கல்லூரிக்கு கையகப்படுத்திய இடத்தில் பழைய குடியிருப்புகளை அகற்றும் பணி மும்முரம்

விருதுநகர்: விருதுநகர் உட்பட 6 மருத்துவகல்லூரிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மருத்துவ கல்லூரிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.4 ஏக்கர் நிலமும், அரசு தலைமை மருத்துவமனையில் 4 ஏக்கர் நிலமும்…

திண்டுக்கல்லில் 6 வயது சிறுமி தோட்டத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள…

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே 6வயது சிறுமி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6வயது சிறுமி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 6 வயது சிறுமியின்…

விருதுநகர் மெயின் பஜாரில் சரக்கு பார வண்டிகளால் பகலில் போக்குவரத்து இடையூறு: போக்குவரத்து காவல் துறையினர் கவனிப்பார்களா?

விருதுநகர்: விருதுநகர் மெயின்பஜாரில் பகல் நேரத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க வரும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.…

நெல்லை, மாநகராட்சி 1வது வார்டு தச்சநல்லூர் சிதம்பராபுரம் பகுதியில் பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

நெல்லை: நெல்லை மாநகராட்சி 1வது வார்டு பகுதிகளான சிதம்பரநகர், ஹவுசிங்போர்டு காலனி, முத்து நகர், ஸ்ரீநகர், தென்கலம் உள்ளி பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நெல்லை – மதுரை தேசிய…

அருப்புக்கோட்டையில் பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கும் பூங்காக்கள்: பாம்புகள் ‘விசிட்’: பொதுமக்கள் அச்சம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடப்பதால் பாம்புகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அருப்புக்கோட்டையில் அஜீஸ் நகர், வசந்தம் நகர், ரயில்வே பீடர் ரோடு, எம்டிஆர்…

ராஜபாளையத்தில் பாதாளச் சாக்கடை பணி ஓராண்டாக இழுத்தடிப்பு: பள்ளத்தில் தவறி விழுந்து கால்நடைகள் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையம் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. இதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்நிலையில், பணிகளை விரைவாக முடிக்காமல் இழுப்பதால், பள்ளங்களில் வாகன ஓட்டிகள்,…

புதுகை நாட்டு கோழிகளுக்கு வெளி மாவட்டங்களில் கிராக்கி: ஏற்றுமதியும் நாளுக்கு நாள் அதிகரிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்க்கப்படும் நாட்டுகோழிகளுக்கு வெளி மாவட்டங்களில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். மேலும்…

தேங்காய் உற்பத்தி குறைவால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள கயிறு உற்பத்தி தொழில்: தொழிலாளர்கள் வேதனை

புதுக்கோட்டை: தேங்காய் மட்டை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தேங்காய் நார் கயிறு தொழில் கடும் நெருக்கடியை சந்திக்க தொடங்கியுள்ளதால் அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேதனையடைந்துள்ளனர். இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு…

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் அதிகரித்து வரும் காட்டுப்பன்றி அட்டகாசம்: நடவடிக்கை கோரி அமைச்சரிடம் மனு

உடுமலை: உடுமலை,மடத்துக்குளம் தாலுகாக்களில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவு வரை காட்டுப்பன்றிகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் வந்து விட்டன. இவை கிராமப்புறங்களிலுள்ள விவசாய விளைநிலங்கள், நீர் நிலைகள் மற்றும் பள்ளம்…

கான்டூர் கால்வாயில் விழுந்த காட்டு யானை, காளைமாடு மீட்பு

உடுமலை: பிஏபி பாசனத்திட்டத்தில் சர்க்கார்பதி பவர்ஹவுசிலிருந்து 49 கி.மீ தொலைவில் உள்ள திருமூர்த்தி அணையை நிரப்ப கான்டூர் கால்வாய் வழியே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. உடுமலை வனரசகத்திற்குள்ளாக  அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக கால்வாய் வருவதால்…

கலசபாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வதமலையில் தூய்மைப்பணி: மாவட்ட ஆட்சியர் உட்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

கலசபாக்கம்:  கலசபாக்கம் அருகே 4560 அடி உயர பர்வதமலையில் கலெக்டர் தலைமையில் நேற்று தூய்மைப்பணி நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் பர்வதமலை உள்ளது. சுமார் 4,560 அடி உயரம் கொண்ட…

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் யாகசாலை பந்தலுக்குள் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கவில்லை: பெ.மணியரசன் புகார்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் யாகசாலை பந்தலுக்குள் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கவில்லை என்று பெ.மணியரசன் புகார் அளித்தார். வேள்வி சாலையில் தமிழில் மந்திரம் ஓத அனுமதிக்கப்படவில்லை என பெரிய கோயிலில் ஆய்வு செய்த…

தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் 452 ஆமை முட்டை சேகரிப்பு

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் ஆமைகள் முட்டையிடும் காலம் துவங்கிய நிலையில், தனுஷ்கோடி கடலோர பகுதியில் மணலில் 452 ஆமை முட்டைகள் வனத்துறையால் சேகரிக்கப்பட்டது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் ஆமைகள் பிப்ரவரி…

உயரம் குறைவு, சீரமைக்காததால் சேத்தியாத்தோப்பு பரவனாற்று பாலத்தில் தொடரும் உயிர்பலி: கண்டும், காணாமல் இருக்கும் அதிகாரிகள்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு  அருகே பரவனாற்று பாலத்தின் அவலநிலையால் அடிக்கடி விபத்து ஏற்படும் அவலம் நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு பரவனாற்று பாலம் அமைந்துள்ளது. சென்னை- கும்பகோணம் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள  இப்பாலம்…

தொற்றுநோய் ஏற்படும் அபாயம்; ஆகாயதாமரை செடிகள் படர்ந்துள்ளதால் வீணாகி வரும் பரிபூரணநத்தம் குளம்: நிதி ஒதுக்கியும் தூர்வாராதது ஏன்?

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கிராம அடிப்படை வசதிகள் இன்னும் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறலாம். கிராமத்தின் சாலைகள் குண்டும், குழியுமாக பெயர்ந்து சாலையின் கற்கள் நடந்து செல்பவர்களின் கால்களை…

ஊட்டி என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தள சீரமைப்பு பணி மந்தம்: இந்த கோடை சீசனுக்காவது தயாராகுமா?

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தள சீரமைப்பு  பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக மந்த கதியில் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும்  ஏராளமான சுற்றுலா பயணிகள்…

சிதம்பரத்தில் நகராட்சி ஆணையரை மாற்ற வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டம்

கடலூர்:  சிதம்பரம் நகராட்சி ஆணையரை மாற்ற வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் தொடர்ந்து தொழில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எதிரொலி: தமிழக – கேரள எல்லையில் தீவிர சோதனை

கோவை: கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையில் மருத்துவர்கள் குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து…

பாதுகாப்பற்ற குடியிருப்பால் ஆதிவாசி மக்கள் பாதிப்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு முக்குப்பாடி ஆதிவாசி காலனியில் பாதுகாப்பற்ற குடியிருப்பால் ஆதிவாசி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பந்தலூர் அடுத்த நெலாக்கோட்டை ஊராட்சி பிதர்காடு முக்குப்பாடி ஆதிவாசி காலனியில்  10க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்கள் வசித்து…

முத்துப்பேட்டையில் உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?… பொதுமக்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை குமரன் கடைதெரு அருகே பேரூராட்சி சார்பில் வாரச்சந்தை ஒன்று வியாழன் தோறும் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட உழவர் சந்தையும் உள்ளது. இதனை திருவாரூரில்…

பாதை உயரமாகி விட்டதால் வயலுக்கு செல்ல வழியின்றி நெற்பயிரை அறுவடை செய்ய முடியாத அவலம்: தொடர்வண்டித் துறை தரைபாலம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி: அகலரயில்பாதை உயரமாகி விட்டதால் வயலுக்கு செல்லர வழியின்றி நெற்பயிரை அறுவடை செய்ய முடியாத அவலம் உள்ளது. இதனால் ரயில்வே தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள…

அரசின் இணையதளத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து பயனடையலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல்

சிவகங்கை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்…

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

மானாமதுரை:  மதுரை-திருவனந்தபுரம் இடையே தினமும் இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னக ரயில்வேயில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரத்தில் இருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு…

திருப்புவனம் பகுதியில் பயிர்களை நாசமாக்கும் காட்டுப்பன்றிகள்: பரண் அமைத்து காவல் காக்கும் விவசாயிகள்

திருப்புவனம்:  திருப்புவனம் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாயிகள் பரண் அமைத்து 24 மணி நேரமும் காவல் காத்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையை…

ராணிப்பேட்டை – சிப்காட் பகுதியில் சாலையோரம் கொட்டும் குப்பையை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை சிப்காட் சாலை ஓரங்களில் குவியல் குவியலாக கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்…

பொம்மிடி பகுதியில் பூத்து குலுங்கும் கோழிக் கொண்டை பூக்கள்

அரூர்: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, டி,அய்யம்பட்டி, பொம்மிடி, திப்பம்பட்டி, தண்டா உள்பட பல பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோழிக் கொண்டை பூ சாகுபடி செய்துள்ளனர். தற்போது சீசன் இல்லாததால்…

மத்திய வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ள 27 ஆயிரம் கி.மீ தொடர்வண்டித் துறை மின்மயத் திட்டம் படிப்படியாக நிறைவேற்றினால் மட்டுமே பலன் தரும்: டிஆர்இயூ கருத்து

மன்னார்குடி: 2020- 21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று முன்தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் ரயில்வே துறையில் 27ஆயிரம் கி.மீ ரயில்வே பாதைகள் மின் மயமாக்கப்படும் என்றும், ரயில்வே…

முசிறி அருகே குருவம்பட்டி பகுதியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு: கள ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு மக்கள் கோரிக்கை

முசிறி: முசிறி அருகே குருவம்பட்டி பகுதியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல், தொன்மை சான்றுகளை தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பாபு என்பவர் கண்டறிந்துள்ளார். இந்த இடத்தை தமிழக அரசு கள ஆய்வு செய்து…

உதகையில் 7.5 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை ஓடுதள பணிகள்: மந்த கதியில் இருப்பதாக விளையாட்டு வீரர்கள் குற்றசாட்டு

நீலகிரி:  உதகையில் 7.5 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை ஓடுதளத்துடன் மலைமேலிட பயிற்சி மைய பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று விளையாட்டு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி…

திண்டுக்கல் அருகே சிறுமி கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல்: ரெங்கனாதபுரத்தில் சிறுமி சஞ்சனாவைக்(5) கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு சஞ்சனாவின் உறவினர்கள் சாலை மறியலில்…

கிராமத்தை உலுக்கிய சோகம்; ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் வேண்டுராயபுரத்தில் தனது சகோதரியுடன் ஆடு மேய்க்கச் சென்று காணாமல் போன சிறுமி வசந்த்குருலட்சுமி (9) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…